/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதியில் நின்ற சாலை பணியால் பரிதவிக்கும் பச்சாகவுண்டனுார்
/
பாதியில் நின்ற சாலை பணியால் பரிதவிக்கும் பச்சாகவுண்டனுார்
பாதியில் நின்ற சாலை பணியால் பரிதவிக்கும் பச்சாகவுண்டனுார்
பாதியில் நின்ற சாலை பணியால் பரிதவிக்கும் பச்சாகவுண்டனுார்
ADDED : ஜூலை 13, 2025 08:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி, பச்சாகவுண்டனுாரில், கருப்பராயன் கோவில் முதல் ஊராட்சி எல்லை வரை, 1,200 மீட்டருக்கு, சாலை அமைக்கும் பணி கடந்த மாதம் துவங்கியது.
கற்கள் பரப்பிய பின், அடுத்த கட்ட பணிகள் மூன்று வாரங்களாக நடக்கவில்லை.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'சாலைப்பணி முடங்கியதால், பெரியவர்கள், முதியோர், குழந்தைகள், செல்ல முடியவில்லை. இந்த பாதையில் இயங்கி வந்த அரசு டவுன் பஸ்சும் தற்போது வருவதில்லை. தனியார் பள்ளி வேன்களும் வருவதில்லை. விரைவில் தார் சாலை அமைக்கும் பணியை துவக்கி முடிக்க வேண்டும்' என்றனர்.

