sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நடுரோட்டை ஆக்கிரமித்து கட்டுமான பொருள் விற்பனை

/

நடுரோட்டை ஆக்கிரமித்து கட்டுமான பொருள் விற்பனை

நடுரோட்டை ஆக்கிரமித்து கட்டுமான பொருள் விற்பனை

நடுரோட்டை ஆக்கிரமித்து கட்டுமான பொருள் விற்பனை


ADDED : டிச 10, 2024 11:57 PM

Google News

ADDED : டிச 10, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவைபுதுாரில், போக்குவரத்துக்கு இடையூறாக, ரோட்டுக்கு நடுவே கட்டுமான பொருள் விற்பனை கடை நடத்தப்பட்டு வருகிறது.

கோவைபுதுார், நால்ரோடு சந்திப்பில், தமிழ்நாடு சிறப்பு காவல்படை முகாம் அருகில், இரண்டு ரோட்டுக்கு நடுவில், சென்டர் மீடியன் பகுதியில், கட்டுமான பொருட்கள் விற்பனை கடை, பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

ரோட்டை ஆக்கிரமித்து செங்கல், மணல், செம்மண், ஜல்லி கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் குவிக்கப்பட்டு, ஜோராக விற்பனை நடந்து வருகிறது. ரோட்டுக்கு நடுவில், பெயர் பலகை வைத்து வியாபாரம் நடக்கிறது. அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் ஒருவர், இந்த கடையை நடத்தி வருகிறார்.

பொது இடத்தில், ரோட்டை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக இந்த கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகில், குனியமுத்துார் புறக்காவல் நிலையம் இருந்தும், போலீசார் கண்டுகொள்வதில்லை.

10 அடி உயரத்திற்கு மேல் ரோட்டுக்கு நடுவில் செங்கல் அடுக்கி வைத்திருப்பதால் விபத்து நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவைபுதுார், சுண்டாக்கமுத்துார் - புட்டுவிக்கி ரோட்டில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், குடிசைகளை மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் உதவியுடன் கடந்த சில வாரத்திற்கு முன் அதிரடியாக அகற்றினர்.

அதே மண்டலத்தில் ரோட்டை ஆக்கிரமித்து, இப்படி சட்ட விரோதமாக கட்டுமான பொருள் விற்பனை நடப்பது, அதிகாரிகள் கண்ணில் படவில்லை என்பது ஆச்சரியம்.

மாநகராட்சி அதிகாரிகள் துணையுடன் இந்த கடை செயல்படுவதாகவும், இதற்கு மாதந்தோறும் அதிகாரிகள் 'மாமுல்' பெற்று வருவதால், கண்டும் காணாமல் இருப்பதாகவும், அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us