sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை கோயில்களில் நவராத்திரி உற்சவம் துவக்கம்

/

கோவை கோயில்களில் நவராத்திரி உற்சவம் துவக்கம்

கோவை கோயில்களில் நவராத்திரி உற்சவம் துவக்கம்

கோவை கோயில்களில் நவராத்திரி உற்சவம் துவக்கம்


ADDED : செப் 21, 2025 11:33 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோயிலில், நவராத்திரி உற்சவத்தையொட்டி, ஒவ்வொரு நாளும் அம்பாளின் ஒவ்வொரு ரூபங்கள், ஒன்பது நாட்களுக்கும் வழிபாடு செய்யப்படுகிறது.

கோவில் அர்த்த மண்டபம், வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வேதவிற்பன்னர்களின் மஞ்சள் குங்கும லட்சார்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் அம்பாளின் அருள் பெற்றனர்.

ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்பாள் கோவிலில், 49வது ஆண்டு நவராத்திரி கலாசார உற்சவம் நேற்று துவங்கியது. இதில் ஸ்ரீ அக் ஷயா ராமநாதனின் கர்நாடக இசைக்கச்சேரி நடந்தது.

நாளை நாம பஜன் மண்டலி குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடக்கிறது. ராம்நகர் கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், வைசியாள் வீதியிலுள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள் கோயில், சித்தாபுதுார் ஜெகன்நாதபெருமாள் கோயில்களிலும், விமரிசையாக நவராத்திரி உற்சவங்கள் விமரிசையாக நடக்கின்றன.






      Dinamalar
      Follow us