தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'நீதி தழைக்க முருகன் துணை நிற்பார்'

'நீதி தழைக்க முருகன் துணை நிற்பார்'

'நீதி தழைக்க முருகன் துணை நிற்பார்'


ADDED : பிப் 08, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனூர்; கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நேற்று காலை, ஈச்சனாரி கோவில் முன் பழநி யாத்திரையை துவக்கினார்.

முன்னதாக எம்.எல்.ஏ.,சரஸ்வதி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி உத்தமராமசாமி, மாநகர் மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயஸ்ரீ, சுந்தராபுரம் மண்டல் தலைவர் முகுந்தன் மற்றும், 60 பெண்கள் உள்பட, நூறு பேர் பங்கேற்ற சிறப்பு பூஜை நடந்தது.

இதையடுத்து வானதி சீனிவாசன் மற்றும் 45 பெண்கள் உள்பட, 80 பேர் 25 கார்களில் பழநிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ''இன்று, தமிழக அரசு எப்படி உள்ளது என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இங்கு நீதி தழைக்க வேண்டும் எனில், தமிழ்நாட்டில் ஆன்மிக சக்தியுடன் ஒரு ஆட்சி மலர வேண்டும். அதற்கு, முருகன் துணை நிற்பார்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us