sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் ஆபத்து சோதனைச்சாவடிகளில் கடுமை தேவை

/

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் ஆபத்து சோதனைச்சாவடிகளில் கடுமை தேவை

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் ஆபத்து சோதனைச்சாவடிகளில் கடுமை தேவை

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் ஆபத்து சோதனைச்சாவடிகளில் கடுமை தேவை


ADDED : ஏப் 17, 2025 10:26 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை, ; தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் அரசு தடைவிதித்துள்ளது. சுற்றுச்சூழலையும், நீர்சூழலையும் பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க, தமிழக அரசு களம் இறங்கியுள்ளது.

பிளாஸ்டிக் மாற்றாக காகிதப்பை, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், வால்பாறை நகராட்சியில் ஆரம்பத்தில் பிளாஸ்டிக் ஒழிக்க தீவிரம் காட்டிய அதிகாரிகள், சமீப காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண் துடைப்புக்காக சிறிய கடைகளில் மட்டுமே சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் அதிகளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறையில், இயற்கை வளம் பாதிப்பதோடு, வனவிலங்குகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: பி.ஏ.பி., பாசன திட்டத்தின் அடித்தளமாக விளங்கும் வால்பாறை மலைப்பகுதியில் உள்ள நீர்நிலைகளையும், வனத்தையும் பாதுகாத்தால் மட்டுமே, மழைப்பொழிவு அதிகமாவதோடு, சமவெளிப்பகுதிகளிலும் விவசாயமும் செழிக்கும்.

இந்நிலையில், சுற்றுலா தலமான வால்பாறையில் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நகராட்சி மற்றும் வனத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும்.

முதல் கட்டமாக, பள்ளி, கல்லுாரிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விதமாக, ஆழியாறு சோதனை சாவடி, கேரள மாநில எல்லையான மளுக்கப்பாறை சோதனை சாவடிகளில்,நகராட்சி மற்றம் வனத்துறை அதிகாரிகள் இணைந்து, இலவசமாக துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us