/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு
/
இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு
ADDED : பிப் 04, 2024 10:15 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 22 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 8,250 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு இப்போதே கடுமையான வெயில் வாட்டி வதைப்பதாலும் இளநீர் சந்தை சூடுபிடித்துள்ளது. இளநீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. தரமான இளநீரை எந்த காரணத்தை கொண்டும் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் என, அறிவுறுத்தப்படுகிறது. வரக்கூடிய வாரங்களில் இளநீரின் விலை அதிகளவில் உறுதியாக உயரும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

