sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகருக்குள் உலா வந்த யானை: நள்ளிரவில் மக்கள் திக்...திக்...

/

நகருக்குள் உலா வந்த யானை: நள்ளிரவில் மக்கள் திக்...திக்...

நகருக்குள் உலா வந்த யானை: நள்ளிரவில் மக்கள் திக்...திக்...

நகருக்குள் உலா வந்த யானை: நள்ளிரவில் மக்கள் திக்...திக்...


ADDED : நவ 03, 2025 01:47 AM

Google News

ADDED : நவ 03, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை நகருக்குள் நள்ளிரவில் விசிட் செய்த ஒற்றை யானையை வனத்துறையினர் விரட்டினர்.

வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறை நகரை ஒட்டியுள்ள புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட ஒற்றை யானை நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, வால்பாறை நகருக்குள் நுழைந்தது.

பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு வழியாக பொதுப்பணித்துறை குடியிருப்புக்கு செல்லும் ரோட்டில் யானைகள் நீண்ட நேரமாக முகாமிட்டது. அங்கு வந்த வனத்துறையினர், குடியிருப்பு பகுதிக்குள் யானை நுழையாதவாறு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பின் யானையை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறை நகரை ஒட்டியுள்ள புதுத்தோட்டம் பகுதியில் பகல் நேரத்தில் முகாமிட்ட ஒற்றை யானை, இரவு நேரத்தில் உணவு தேடி, வால்பாறை நகருக்குள் நுழைந்தது. தகவல் அறிந்த மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் விரைந்து சென்று, யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தால் பொதுமக்களாகவே விரட்டாமல், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us