/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
3வது முறையாக நிரம்பிய பரம்பிக்குளம்: மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்
/
3வது முறையாக நிரம்பிய பரம்பிக்குளம்: மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்
3வது முறையாக நிரம்பிய பரம்பிக்குளம்: மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்
3வது முறையாக நிரம்பிய பரம்பிக்குளம்: மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்
ADDED : அக் 23, 2024 10:24 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, டாப்சிலிப் அருகே, பரம்பிக்குளம் அணை, மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியதால், மூன்று மதகுள் வழியாக உபரிநீர் நேற்று வெளியேற்றப்பட்டது.
பொள்ளாச்சி, டாப்சிலிப் அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. பரம்பிக்குளம் -- ஆழியாறு பாசன (பி.ஏ.பி.-,) திட்டத்தில் உயிர் நாடியாக விளங்கும் பரம்பிக்குளம் அணை, 72 அடி உயரம் கொண்டது. மொத்தம், 17 டி.எம்.சி., நீர் இருப்பு வைக்கலாம்.
கனமழையால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்த சூழலில், செப்., மாதம் 5ம் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மீண்டும், செப்., 15ம் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியதால் மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு 71:70 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து, அணை பாதுகாப்பு கருதி, மூன்று மதகுகள் வழியாக வினாடிக்கு, 2,400 கனஅடியும், கால்வாய் வழியாக, வினாடிக்கு, 450 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது.
உபரி நீரானது, பொரிங்கல் குத்து அணை, சாலக்குடி அருவி வழியாக அரபிக்கடலில் கலக்கிறது.அணைக்கு நீர் வரத்து இருப்பதால், பரம்பிக்குளம் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

