/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பதிவு செய்யாத தங்கும் விடுதிகள்; மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
/
பதிவு செய்யாத தங்கும் விடுதிகள்; மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
பதிவு செய்யாத தங்கும் விடுதிகள்; மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
பதிவு செய்யாத தங்கும் விடுதிகள்; மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
ADDED : ஜூன் 12, 2024 10:16 PM
உடுமலை : பதிவு செய்யாத தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை பாயும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், பணிபுரியும் மகளிருக்கான, 107 தங்கும் விடுதிகள் மட்டுமே பதிவு செய்துள்ளன. மாணவ, மாணவியருக்கான பள்ளி விடுதிகள், கல்லுாரி விடுதிகள், பணிபுரியும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் அனைத்தும், கட்டாயம் பதிவு செய்து, உரிமம் பெற்றிருக்கவேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பதிவு செய்யாத விடுதிகள், http://tnswp.com என்கிற ஆன்லைன் போர்ட்டல் வாயிலாக, உரிய ஆவணங்களுடன், இம்மாதம் 30ம் தேதிக்குள் பதிவு செய்வது கட்டாயம்.
அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த அல்லது வாடகை கட்டட ஒப்பந்த பத்திரம், கட்டட வரைபடம், கட்டட உறுதிச்சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று, சுகாதார சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவு செய்யப்படாத தனியார் விடுதிகளின் நிர்வாகிகள் மற்றும் மேலாளர்கள் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 2 ஆண்டுகால சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

