sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கவியருவியில் நீர் வரத்து இல்லை: சுற்றுலாப்பயணியர் ஏமாற்றம்

/

கவியருவியில் நீர் வரத்து இல்லை: சுற்றுலாப்பயணியர் ஏமாற்றம்

கவியருவியில் நீர் வரத்து இல்லை: சுற்றுலாப்பயணியர் ஏமாற்றம்

கவியருவியில் நீர் வரத்து இல்லை: சுற்றுலாப்பயணியர் ஏமாற்றம்


ADDED : ஏப் 14, 2024 11:29 PM

Google News

ADDED : ஏப் 14, 2024 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாறு கவியருவியில், தண்ணீர் வரத்து இல்லாததால், சுற்றுலாப்பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

பொள்ளாச்சி அடுத்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலையில் முக்கிய சுற்றுலா தலங்களாக ஆழியாறு அணை, பூங்கா, ஆற்றுப்படுகை மற்றும் கவியருவி பகுதிகள் உள்ளன. நேற்று, தமிழ்ப் புத்தாண்டையொட்டி, அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிந்தனர்.குறிப்பாக, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் இப்பகுதிகளுக்கு வந்தனர். பகலில் கடும் வெயில் நிலவியதால், அதிகப்படியான சுற்றுலா பயணியர் கவியருவியில் குளிக்க ஆர்வம் காட்டினர்.

ஆனால், தண்ணீர் வரத்து இல்லாததால், அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

வனத்துறையினர் கூறியதாவது:

பகலில் வெயில் அதிகம் இருந்ததால், பூங்காவை சுற்றிப் பார்த்த பலரும், கவியருவிக்கு சென்று குளிக்க ஆர்வம் காட்டினர். அதேநேரம், சுற்றுலா பயணியர் விதிமீறலை தடுக்க, வேட்டைத்தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், மழையின்மையால், அருவிக்கான நீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைய வேண்டியதாயிற்று.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us