sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தண்டுமாரியம்மன் கோவில் சித்திரைப்பெருந்திருவிழா; அக்னிச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் பக்தர்கள் பரவசம்

/

தண்டுமாரியம்மன் கோவில் சித்திரைப்பெருந்திருவிழா; அக்னிச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் பக்தர்கள் பரவசம்

தண்டுமாரியம்மன் கோவில் சித்திரைப்பெருந்திருவிழா; அக்னிச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் பக்தர்கள் பரவசம்

தண்டுமாரியம்மன் கோவில் சித்திரைப்பெருந்திருவிழா; அக்னிச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் பக்தர்கள் பரவசம்


ADDED : ஏப் 25, 2024 06:36 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையின் குல தெய்வமாக போற்றப்படும் தண்டுமாரியம்மன் கோவில் சித்திரைப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சக்தி கரகம், அக்னிச்சட்டி பால்குட அணிவகுப்பு ஊர்வலம், பக்தர்கள் சூழ கோலாகலமாக நடந்தது.

நேற்று பெரிய கடைவீதி கோனியம்மன் கோவிலிலிருந்து காலை 6:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சக்திகரகங்கள் மேள தாளங்கள் முழங்க புறப்பட்டன.

அக்னிச்சட்டி, பால்குடம் ஏந்திய பக்தர்களும், அலகு குத்திய பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் திரளாக அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர்.

காலை 7:00 மணிக்கு புறப்படுவதாக இருந்த அக்னிச்சட்டி ஊர்வலம், தாமதமாக 9:00 மணிக்கே புறப்பட்டது.

போக்குவரத்து மாற்றம் என்று போலீசார் அறிவித்திருந்தனர் ஆனால் ஒப்பணக்காரவீதி ராஜவீதி சந்திப்பில், போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படவில்லை. அதே போல் வைசியாள்வீதி சந்திப்பு, வெரைட்டிஹால்ரோடு சந்திப்புகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படாததால், வாகனங்கள் பூச்சட்டி ஊர்வலத்துடன் சென்றன.

இதனால் தீச்சட்டி ஏந்திய பெண்பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

தார்சாலையில் சிரமப்பட்ட பக்தர்கள்


கோடை வெயில் அனல் பறக்க, அக்னிச்சட்டி ஏந்திய பக்தர்கள், தார்சாலையில் நடப்பதற்கு சிரமப்பட்டனர்.

இதைக்கண்ட சில பக்தர்கள் இரண்டு லாரிகளில் தண்ணீரை வரவழைத்து தார்சாலையை முழுமையாக நனைத்து சென்றனர்.

பா ல்குடம் ஏந்திய அரசு ஊழியர்கள்


நேர்த்திக்கடன் செலுத்த கலெக்டர் அலுவலக பெண் ஊழியர்கள் சிலர், பால்குடம் ஏந்தியும் அக்னிச்சட்டி ஏந்தியும், ஊர்வலத்தில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us