sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தரைமட்ட பாலத்தின் அருகே பள்ளத்தால் விபத்து அபாயம்

/

தரைமட்ட பாலத்தின் அருகே பள்ளத்தால் விபத்து அபாயம்

தரைமட்ட பாலத்தின் அருகே பள்ளத்தால் விபத்து அபாயம்

தரைமட்ட பாலத்தின் அருகே பள்ளத்தால் விபத்து அபாயம்


ADDED : ஜூன் 12, 2024 10:10 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 10:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மரப்பேட்டை நுாலக ரோட்டில், தரைமட்ட பாலத்தின் அருகே பெரிய பள்ளம் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.

பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் இருந்து, மரப்பேட்டை நுாலகம், கந்தசாமி பூங்கா வழியாக நகர குடியிருப்பு பகுதிகள், கோட்டூர், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

தினமும், 200க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் இந்த ரோட்டில், மரப்பேட்டை நுாலகம் அருகே தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது. அதன் அருகே பெரிய பள்ளம் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.

பொதுமக்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி - உடுமலை ரோடு மரப்பேட்டை நுாலகம் அருகே, தரைமட்ட பாலத்தையொட்டி கழிவுநீர் கால்வாயில் பெரிய பள்ளம் உள்ளது. ரோடு திரும்பும் இடத்தில் உள்ள பள்ளத்தால், வாகன ஓட்டுநர்கள் கவனமின்றி வந்தால், சாக்கடை கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது.

பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் வருவோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குழியை சீரமைக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us