sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிதாக கட்டிய பாலம் 4 மாதத்தில் 'டமால்'

/

புதிதாக கட்டிய பாலம் 4 மாதத்தில் 'டமால்'

புதிதாக கட்டிய பாலம் 4 மாதத்தில் 'டமால்'

புதிதாக கட்டிய பாலம் 4 மாதத்தில் 'டமால்'

10


ADDED : ஏப் 10, 2024 03:02 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 03:02 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில், ஐந்து கால்வாய் வழியாக, 6,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அதில், காரப்பட்டி கால்வாயில் உள்ள பாலம் சேதமடைந்து காணப்பட்டது.

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பின், காரப்பட்டி கால்வாயில், தென்கரை பாலம் அருகே, 1.56 கோடி ரூபாய் செலவில், புதிய பாலம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

ஓடையின் குறுக்கே பாலம் கட்டுதல் மற்றும் காரப்பட்டி கால்வாய், 4.120 கி.மீ. உள்ள நீர் வழி பாலத்தில் சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி கன்ஸ்ட்ரக் ஷன் என்ற நிறுவனம் இப்பணியை மேற்கொண்டது.

பணி முடிந்து நான்கு மாதங்கள் கூட ஆகாத நிலையில், பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்து சரிந்தது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'காரப்பட்டி கால்வாய் பாலப்பணிகள் தரமாகத் தான் மேற்கொள்ளப்பட்டது.

'தண்ணீர் நிறுத்தும் போது, கால்வாயை சேதப்படுத்துகின்றனர். இதனால், தண்ணீர் திறக்கும்போது கசிவு ஏற்பட்டு, சுவர் இடிந்திருக்கலாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us