/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேச்சியம்மன் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேகம்
/
பேச்சியம்மன் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 02, 2024 12:42 AM
அன்னூர்;தாசபாளையம், பேச்சியம்மன் கோவிலில் வரும் 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அன்னூர் அருகே தாசபாளையத்தில், பழமையான பேச்சியம்மன் கோவில் வளாகத்தில் புதிதாக முருகன் சிலை நிறுவியும், கோபுரம் அமைத்தும் திருப்பணிகள் செய்யப்பட்டன.
கும்பாபிஷேக விழா வரும் 3ம் தேதி மாலை 5:00 மணிக்கு, விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது, இரவு கோபுர கலசம் நிறுவுதல் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 4ம் தேதி காலை 10:30 மணிக்கு, விநாயகர், முருகன், கன்னிமார், பேச்சியம்மன் மற்றும் கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து, மகா அபிஷேகம், கோ பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

