/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓம்சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
ஓம்சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : செப் 17, 2024 10:20 PM

பெ.நா.பாளையம் : உருமாண்டம்பாளையம் பொன்விழா நகர் ஓம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இங்கு ஓம் சக்தி விநாயகர் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளுகிறார். புதிதாக அரசடி விநாயகர் கோவில், ஏக மண்டபம், முன் மண்டபம் அமைத்து திருக்கோவில் வளாகம் முழுவதும் புதிதாக வர்ணங்கள் பூசி, திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தொடர்ந்து, கும்பாபிஷேக விழா, திருநெறிய தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.
ஐம்பூத வழிபாடு, நிலத்தேவர், மூத்த பிள்ளையார் வழிபாடு, புற்று மண் எடுத்து காப்பணிதல், திருக்குடங்கள் வேள்வி, வாயில் காவலர் வழி பாடு, விமான கலசம் நிறுவுதல், 108 வகையான காய்கனி, கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள் படைத்து சிறப்பு பூஜைகள், பேரொளி வெளிப்பாடு, மலர் வழிபாடு, மூலமூர்த்திகளுக்கு எண் வகை மருந்து சாத்துதல், தீர்த்த குடங்கள் ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி, எல்லை மாகாளியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
ராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

