sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்லுாரிகளில் முன்கூட்டியே அட்மிஷன் துவங்கியதாக புகார்

/

கல்லுாரிகளில் முன்கூட்டியே அட்மிஷன் துவங்கியதாக புகார்

கல்லுாரிகளில் முன்கூட்டியே அட்மிஷன் துவங்கியதாக புகார்

கல்லுாரிகளில் முன்கூட்டியே அட்மிஷன் துவங்கியதாக புகார்


ADDED : ஏப் 12, 2024 12:38 AM

Google News

ADDED : ஏப் 12, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், நடப்பாண்டில் ஒற்றை சாளர முறை சேர்க்கை செயல்படுத்தப்படவுள்ள சூழலில், ஒரு சில கல்லுாரிகள் சேர்க்கை செயல்பாடுகளை முன்கூட்டியே துவக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அரசு கல்லுாரிகளில் கடந்தாண்டு ஒற்றை சாளர முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. நடப்பாண்டில், அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகளிலும்சேர்க்கை நடைமுறை மாற்றப்படவுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால், கல்லுாரி கல்வி இயக்குனரகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாவதில் தாமதம் நிலவுகிறது. இதுகுறித்த கூட்டம் அரசு உதவிபெறும் கல்லுாரி முதல்வர்களுக்கு நடத்தப்பட்டது.

உயர்கல்வித்துறையில் இருந்து, உரிய அறிவிப்பு வெளிவராத நிலையிலும், பிளஸ்2 முடிவுகள் இதுவரை வெளியிடாத சூழலிலும் பல கல்லுாரிகள் அட்மிஷன் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, பல்கலை ஆசிரியர் சங்கம் முன்வைத்த புகாரின் அடிப்படையில், கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட அரசு உதவிபெறும் கல்லுாரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.






      Dinamalar
      Follow us