sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓட்டுச்சாவடி அலுவலருக்கு பணியிடம் ஒதுக்கீடு

/

ஓட்டுச்சாவடி அலுவலருக்கு பணியிடம் ஒதுக்கீடு

ஓட்டுச்சாவடி அலுவலருக்கு பணியிடம் ஒதுக்கீடு

ஓட்டுச்சாவடி அலுவலருக்கு பணியிடம் ஒதுக்கீடு


ADDED : ஏப் 03, 2024 10:39 PM

Google News

ADDED : ஏப் 03, 2024 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

திருப்பூர் மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக, 12,728 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,540 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வரும், 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளநிலையில், சுழற்சி முறையில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகிறது.

முதல் கட்டமாக கடந்த மார்ச் 21ம் தேதி, சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் பார்வையாளர் ஹிமான்சு குப்தா தலைமையில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் கூட்டம் நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக, 12,728 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், டி.ஆர்.ஓ., ஜெய்பீம் உட்பட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us