ADDED : நவ 27, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார்: பரங்கிமலை - கிண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பச்சையம்மன் கேட் பகுதியில், தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர், ரயிலில் அடிபட்டு இறந்ததாக தகவல் வந்தது.
அங்கு சென்ற ரயில்வே போலீசார், இறந்த நபரின் உடலை, பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தியதில், இறந்தவர், ஆலந்துார், ஆபிரகாம் நகர், சவுரி தெருவைச் சேர்ந்த விஷ்ணு, 21, என்பது தெரியவந்தது.

