ADDED : செப் 01, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடி அடுத்த கண்ணபாளையம், மேட்டுப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா, 19; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 29ம் தேதி காலை துாங்கி எழுந்தபோது, உடலில் ஏதோ பூச்சி கடித்து, அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வாயில் நுரை வந்து மயங்கி விழுந்துள்ளார்.
மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.