sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மகளிர் தொகைக்கு விண்ணப்பம் நெற்குன்றத்தில் பெண்கள் ஆர்வம்

/

மகளிர் தொகைக்கு விண்ணப்பம் நெற்குன்றத்தில் பெண்கள் ஆர்வம்

மகளிர் தொகைக்கு விண்ணப்பம் நெற்குன்றத்தில் பெண்கள் ஆர்வம்

மகளிர் தொகைக்கு விண்ணப்பம் நெற்குன்றத்தில் பெண்கள் ஆர்வம்


ADDED : ஜூலை 24, 2025 12:19 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெற்குன்றம், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க, நெற்குன்றத்தில் நடந்த சிறப்பு முகாமில் பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் 148வது வார்டு என்.டி.படேல் சாலையில் உள்ள மஹாலில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், நேற்று நடந்தது.

இதில், மகளிர் உரிமை தொகைக்கு, 10க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க வரும் பெண்களுக்கு, தனி வழியும் ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும், இம்முகாமில் விண்ணப்பிக்க ஏராளமானோர் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அத்துடன், என்.டி.படேல் சாலையிலும் நெரிசல் ஏற்பட்டது.

இந்த முகாமை பார்வையிட்ட அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

சென்னையில், 109 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட உள்ளது. வரும் நவ., மாதத்திற்குள் இந்த முகாம்கள் நடத்தி முடிக்கப்படும். முகாமில் 'சர்வர்' சுணக்கமாக இருந்தால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரவாயல் தி.மு.க., - எம்.எல்.ஏ., கணபதி, மண்டலக்குழு தலைவர் ராஜ், கவுன்சிலர் கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us