ADDED : டிச 22, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த லிங்கய்யா மகள் சந்தியா ராணி, 31; திருமணம் ஆகாத அவர், மூட்டுவாதம் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சந்தியா ராணிக்கு நேற்று காலை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அவருக்கு, தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கிருந்து ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வரும் வழியிலேயே, இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.

