sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விஜயதசமியை முன்னிட்டு இன்று வடபழனியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

/

விஜயதசமியை முன்னிட்டு இன்று வடபழனியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

விஜயதசமியை முன்னிட்டு இன்று வடபழனியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

விஜயதசமியை முன்னிட்டு இன்று வடபழனியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி


ADDED : அக் 12, 2024 12:41 AM

Google News

ADDED : அக் 12, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.

நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவான நேற்று, காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை; மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது.

சக்தி கொலுவில் அம்பாள், சரஸ்வதி அலங்காரத்தில் நேற்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாலை, நிருத்தியம் நடனம் மற்றும் இசைப்பள்ளி மாணவர்களின் கச்சேரி நடந்தது. இரவு, மாஸ்டர் அபிநவ் மகேசின் பக்திப்பாடல்கள் பாடப்பட்டது. பின்னணி பாடகர் வேல்முருகனின் பக்தி இசைக் கச்சேரி நடந்தது.

மேலும், அம்மன் கொலு சன்னிதியில், அம்பாளுக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை; மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

விஜயதசமியை முன்னிட்டு, இன்று காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், 2.5 முதல் 3.5 வயது வரை உள்ள இளம் தளிர்களின் பிஞ்சுவிரல் பிடித்து அவர்களின் தொடக்கக் கல்வியை ஆரம்பிக்கும் நிகழ்வு நடக்கிறது.






      Dinamalar
      Follow us