/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் துாய்மை சேவகர் ஆடலரசன் காலமானார்
/
கோவில் துாய்மை சேவகர் ஆடலரசன் காலமானார்
ADDED : நவ 27, 2025 03:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கோவில்களில் துாய்மை பணி மேற்கொண்டு வந்த ஆடலரசன், உடல்நலக்குறைவால் காலமானார்.
வேளச்சேரி, லட்சுமி நகரை சேர்ந்தவர் ஆடலரசன், 70. இவர், சென்னை கூட்டுறவு வங்கியில், உதவி பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், 'திருக்கோவில் உழவாரப்பணி' எனும் அமைப்பை உருவாக்கி, கடந்த 40 ஆண்டுகளாக கோவில்களில் துாய்மை பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

