sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திடீர் மழையால் நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள்

/

திடீர் மழையால் நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள்

திடீர் மழையால் நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள்

திடீர் மழையால் நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள்


ADDED : ஏப் 04, 2025 12:21 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார், சென்னையில் கடந்த சில வாரங்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை, புறநகர் பகுதிகளில் எதிர்பாராமல் மழை பெய்ததால், சாலைகள் மிகவும் மோசமடைந்தன.

மெட்ரோ ரயில், வடிகால், கால்வாய் கட்டும் பணி, குடிநீர், கழிவுநீர் குழாய் பதிப்பு போன்ற பணிகளுக்காக, ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டதால், அதில் மழைநீர் தேங்கி சகதியாக மாறியது. பிரதான சாலைகளில் தேங்கிய மழைநீரால், வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன.

குறிப்பாக, வேளச்சேரி, மத்திய கைலாஷ், தரமணி, இந்திரா நகர், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், குமரன் நகர் போன்ற பகுதிகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், வழக்கமான நேரத்தில் வேலைக்கு புறப்பட்டோர், தாமதமாக பணி இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் சூழல் உள்ளதால், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us