sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போக்குவரத்து எஸ்.ஐ., மீது கல் வீசி தாக்கியவர் கைது

/

போக்குவரத்து எஸ்.ஐ., மீது கல் வீசி தாக்கியவர் கைது

போக்குவரத்து எஸ்.ஐ., மீது கல் வீசி தாக்கியவர் கைது

போக்குவரத்து எஸ்.ஐ., மீது கல் வீசி தாக்கியவர் கைது


ADDED : மே 04, 2025 12:00 AM

Google News

ADDED : மே 04, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலாங்கரை, நீலாங்கரை போக்குவரத்து சப் - இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், 55. இவர், நேற்று முன்தினம் இரவு, இ.சி.ஆர்., அக்கரை சிக்னலில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது, போதையில் நடந்து வந்த ஒருவர், வாகனங்களுக்கு இடையூறாக சாலையின் நடுவே நின்றார். அவரை அங்கிருந்து நகர்ந்து செல்லும்படி, ரங்கநாதன் வலியுறுத்தினார்.

அவரின் பேச்சை கேட்காத அந்த நபர், சாலையிலேயே நின்றார். மீண்டும் சத்தம் போட்டதால், அங்கிருந்து நகர்ந்து சென்ற போதை நபர், சாலையில் கிடந்த கல்லை எடுத்து ரங்கநாதன் மீது வீசினார்.

இதை சற்றும் எதிர்பாராத ரங்கநாதனின் பின் தலையில் கல் பட்டு, பலத்த காயம் ஏற்பட்டது. அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சக போக்குவரத்து போலீசார், தாக்கிய நபரை பிடித்து, நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், போதை ஆசாமி வெட்டுவாங்கேணியை சேர்ந்த ரவி, 35, என தெரிந்தது. போலீசார், அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us