sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அதிகார நந்தி வாகனத்தில் அருள்பாலித்த காரணீஸ்வரர்

/

அதிகார நந்தி வாகனத்தில் அருள்பாலித்த காரணீஸ்வரர்

அதிகார நந்தி வாகனத்தில் அருள்பாலித்த காரணீஸ்வரர்

அதிகார நந்தி வாகனத்தில் அருள்பாலித்த காரணீஸ்வரர்


ADDED : மே 03, 2025 11:53 PM

Google News

ADDED : மே 03, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் சித்திரைப் பெருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று அதிகார நந்தி சேவை நடந்தது.

காலை 6:00 மணிக்கு, அதிகார நந்தி வாகனத்தில், அம்பாளுடன் எழுந்தருளிய உற்சவர் காரணீஸ்வரர், கோபுர தரிசனம் தந்தார். பின், நான்கு மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருடன், மயில்வாகனத்தில் முருகப் பெருமானும், அன்ன வாகனத்தில் அம்பாளும் வலம் வந்தனர்.

நாளை மதியம் 1:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகன புறப்பாடு நடக்கிறது. விழாவின் பிரதான நிகழ்வான தேர்த்திருவிழா வரும் 7ம் தேதி காலை 6:00 மணிக்கு நடக்கிறது.

வரும், 8ம் தேதி மாலை புஷ்ப விமானத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு சுவாமி திருக்காட்சி அளிக்கிறார்.

வரும் 9ம் தேதி இரவு, பிச்சாடனார் கோலத்தில் திருவீதி உலா நடக்கிறது. திருக்கல்யாண உற்சவம் 10ம் தேதி நடக்கிறது. அன்று இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. அடுத்த நாள் புஷ்ப பல்லக்கு சேவை நடக்கிறது.






      Dinamalar
      Follow us