/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடு முட்டி காயமடைந்த முதியவர் உயிரிழப்பு
/
மாடு முட்டி காயமடைந்த முதியவர் உயிரிழப்பு
ADDED : நவ 27, 2025 02:45 AM

சென்னை: மாடு முட்டி காயமடைந்தவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, மாதவரம் அடுத்த மாத்துார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆனந்த் சைன், 79. இவர், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் வினியோகித்து வந்தார்.
இவர், கடந்த 14ம் தேதி சைக்கிளில் பால் போ டும் பணியில் இருந்தார். மாத்துார் பிரதான சாலையில் சென்றபோது, ஒரு பசு மாடு, குதி ரையுடன் உணவிற்காக தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந் து ள்ளது. திடீரென மிரண்டு ஓடிய பசு மாடு முதியவர் ஆனந்த் சைன் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த முதியவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி, முதியவர் நேற்று முன்தினம் மரணமடைந்தார். இது குறித்து மாதவரம் பால் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

