/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலம்பாக்கத்தில் ரூ.3.6 கோடியில் வளர்ச்சி பணி
/
கோவிலம்பாக்கத்தில் ரூ.3.6 கோடியில் வளர்ச்சி பணி
ADDED : பிப் 08, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவிலம்பாக்கம், கோவிலம்பாக்கம் ஊராட்சியில், 33 நகர், 450 தெருக்களி உள்ளன. இப்பகுதியில் 3.6 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
ஊராட்சி தலைவர் கீதா கூறியதாவது:
ஊராட்சியில், 15 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
தற்போது, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில், 3.6 கோடி ரூபாய் மதிப்பிலான அடிப்படை வசதிப் பணிகள் துவக்கப்படுகின்றன. இதில், கோடி ரூபாய் நிதியில் இரண்டு பூங்கா அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

