ADDED : மார் 12, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம் பாலைய்யா கார்டன், பிருந்தாவன் தெரு போக்குவரத்து நிறைந்தது. இச்சாலையின் மையப்பகுதியில், மின் கம்பம் ஒன்று உடைந்து, விரிசலுடன் காணப்படுகிறது.
எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயம் உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் உயிர் பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இது குறித்து, மாநகராட்சி மற்றும் மின் வாரிய அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபரீதம் நிகழும் முன், மின் வாரிய அதிகாரிகள், சேதமடைந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.
- நாகராஜன், பெருங்குடி.
மடிப்பாக்கம், பாலைய்யா கார்டன், பிருந்தாவன் தெருவில் உடைந்து விரிசலுடன் காணப்படும் மின் கம்பம்.

