/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2.47 கோடியில் திட்டப் பணிகள் துவக்கம்
/
ரூ.2.47 கோடியில் திட்டப் பணிகள் துவக்கம்
ADDED : மார் 07, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
சென்னை, சின்னமலை வெங்கடாபுரம் பகுதியில், தென்சென்னை எம்.பி., மேம்பாட்டு நிதியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டடத்திற்கு, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்றுமுன்தினம் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, ஜோதியம்மாள் நகரில் 20 லட்சம் ரூபாயில் பல்நோக்கு கட்டடம், 30 லட்சம் ரூபாயில் நுாலகம், 20 லட்சம் ரூபாயில் நியாய விலைக்கடை மற்றும் ஆர்.வி.கே.நகரில் 37 லட்சம் ரூபாய் மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்நிகழ்வில், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

