ADDED : ஏப் 03, 2024 12:19 AM
எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர், சரண்யா, 33. இவர், கே.கே.,நகர் பாரதிதாசன் காலனியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த மார்ச் 29ல் சித்தாளாக பணி செய்தார். அங்கு கொத்தனாராக வேலை செய்த திருவொற்றியூர் அண்ணா நகர் கிளாஸ் பேக்டரி சாலையைச் சேர்ந்த வேல்முருகன், 50 என்பவர், சரண்யாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதைக் கண்டித்த சரண்யா, தன் கணவரிடம் புகார் தெரிவிப்பதாக கூறி, மொபைல் போனை எடுத்து பேச முயன்றார். இதில், ஆத்திரமடைந்த வேல்முருகன், அவரிடம் இருந்து மொபைல் போனை பறித்தார். அப்போது நடந்த சண்டையில், சரண்யாவை கீழே தள்ளி சுத்தியலால் தாக்கி விட்டு தப்பி சென்றார்.
அங்கிருந்தோர் சரண்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரண்யா நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி, தலைமறைவாக இருந்த வேல்முருகனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

