sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி பெரியபாளையத்தில் விறு விறு

/

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி பெரியபாளையத்தில் விறு விறு

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி பெரியபாளையத்தில் விறு விறு

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி பெரியபாளையத்தில் விறு விறு


ADDED : ஏப் 27, 2024 12:34 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபாளையம், சென்னை ----- திருத்தணி தேசிய நெடுஞ்சாலை வழியாக பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு செல்ல, பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலை இருவழிப் பாதையை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

மக்கள் தொகை, கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால், போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்துகள் நேரிட்டன.

இதையடுத்து, பொதுமக்கள் கோரிக்கை ஏற்று, சாலை விரிவாக்கத்திட்டத்தின் கீழ், நான்கு வழி சாலையாக மாற்ற, 111 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அதன்படி, திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை முதல் வெங்கல், அம்மனம்பாக்கம் வரை 11 கி.மீ., துாரம் சாலை விரிவாக்கம் செய்ய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

அதேபோல், சாலை விரிவாக்கப் பணிக்காக, தாமரைப்பாக்கம் வரை, 374 சாலை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

முதற்கட்டமாக, திருநின்றவூரில் இருந்து பெரியபாளையம் மார்க்கமாக, 13.12 அடி அகலத்துக்கு மழைநீர் வடிகால் மற்றும் தரைப்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டன. தற்போது வரை, 4 கி.மீ., துாரத்துக்கு வடிகால் மற்றும் தார்ச்சாலை அமைத்தல் என, 30 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.

ஏற்கனவே பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலை, 23 அடி சாலையாக இருந்தது. தற்போது விரிவாக்கம் செய்யும் நான்கு வழிச்சாலை, இரு மார்க்கத்திலும் தலா 49.21 அடி சாலையாக அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீபதி நகர், நாசிக் நகர், முல்லை நகர் உள்ளிட்ட சில இடங்களில் சாலை சுருங்கி, ஒரு வழிப் பாதையாக மாறியுள்ளது. அப்பகுதியில் பணிகள் முழுமை அடையாததால், கனரக வாகனங்கள் செல்லும்போதும் புழுதி மண்டலமாக மாறி விடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

எனவே, சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சாலை விரிவாக்கப் பணி, செப்., மாதம் முடியும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சடகோபன் கூறுகையில், “திருநின்றவூர் -- பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை --- திருத்தணி தேசிய நெடுஞ்சாலை வழியாக தாம்பரம் ---- மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையை இணைத்தால் தான், இந்த சாலை விரிவாக்கப் பணிகள் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார்.






      Dinamalar
      Follow us