/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆமை வேகத்தில் மெட்ரோ பணிகள் திருமங்கலத்தில் 9 மாதங்களாக தவிப்பு
/
ஆமை வேகத்தில் மெட்ரோ பணிகள் திருமங்கலத்தில் 9 மாதங்களாக தவிப்பு
ஆமை வேகத்தில் மெட்ரோ பணிகள் திருமங்கலத்தில் 9 மாதங்களாக தவிப்பு
ஆமை வேகத்தில் மெட்ரோ பணிகள் திருமங்கலத்தில் 9 மாதங்களாக தவிப்பு
ADDED : ஜூலை 17, 2024 12:25 AM

திருமங்கலம், திருமங்கலம், 100 அடி சாலையில், ஆமை வேகத்தில் நடக்கும் மெட்ரோ பணிகளால், ஒன்பது மாதங்களுக்கு மேல், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னையில், இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மூன்று வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. அதில், மாதவரம் பால் பண்ணையில் இருந்து, சோழிங்கநல்லுார் வரை, 44.5 கி.மீ., பணியும் ஒன்று.
இந்த வழித்தடம் ரெட்டேரி, பெரம்பூர், கொளத்துார், வில்லிவாக்கம், அண்ணாநகர் மேற்கு, திருமங்கலம், கோயம்பேடு, விருகம்பாக்கம், போரூர் வழியாக சோழிங்கநல்லுார் வரை செல்கிறது.
இந்த பணிகளுக்காக, சாலை முழுதும் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. இதனால், பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது.
குறிப்பாக, திருமங்கலம் - கோயம்பேடு பகுதியில், 100 அடி சாலையில் நடக்கும் பணிகளுக்காக, கடந்த ஆண்டு, சிக்னல்கள் மற்றும் 'யு டர்ன்'கள் அடைக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இதனால், கடந்த ஓராண்டாக இருபுறங்களிலும் குறைந்தது, 2 கி.மீ., துாரத்திற்கு, நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
கோயம்பேடில் இருந்து, 100 அடி சாலை வழியாக வில்லிவாக்கம், முகப்பேர், அம்பத்துார், பாடி, அண்ணாநகர் பகுதிகளுக்கு தினமும், ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
பொதுவாகவே, 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். தற்போது, மெட்ரோ பணிகளுக்காக சாலை முழுதும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால், கோயம்பேடில் இருந்து திருமங்கலம் பகுதியில், 'யு -- டர்ன்' கிடையாது.
அதற்கு பதில், அண்ணாநகர் 12வது பிரதான சாலை வழியாக சென்று தான் திரும்ப வேண்டும்.
அதேபோல், திருமங்கலம் மேம்பாலத்தில் இருந்து, 3 கி.மீ., சென்று, பாடி மேம்பாலத்தில் மேல் வரை, சென்று தான் திரும்ப வேண்டிய நிலை உள்ளது.
இதற்கிடையில், திருமங்கலத்தில் உள்ள பிரபல வணிக வளாகம் அருகில், வார இறுதி நாட்களில் சாலை முழுதும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், மக்கள் சிரமப்படுகின்றனர்.
கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் நடக்கும் மெட்ரோ பணிகளில், உடனுக்குடன் பணிமுடிந்த இடங்களில் தடுப்புகள் அகற்றப்பட்டு, மீண்டும் அதே இடங்களில் 'யு - டர்ன்' வசதி செய்யப்படுகிறது.
ஆனால், திருமங்கலத்தில் மட்டும் கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேல், சாலையில் ஒரு தடுப்பைக் கூட அகற்றவில்லை. இதனால், உண்மையில் இங்கு பணிகள் நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மழைக்காலம் என்பதால், மெட்ரோ பணிகளை விரைந்து முடித்து, 'யு - டர்ன்' அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

