sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஐ.சி.எல்., பின்கார்ப் துாதர்களாக மம்மூட்டி, சமந்தா நியமனம்

/

ஐ.சி.எல்., பின்கார்ப் துாதர்களாக மம்மூட்டி, சமந்தா நியமனம்

ஐ.சி.எல்., பின்கார்ப் துாதர்களாக மம்மூட்டி, சமந்தா நியமனம்

ஐ.சி.எல்., பின்கார்ப் துாதர்களாக மம்மூட்டி, சமந்தா நியமனம்


ADDED : மார் 30, 2024 12:45 AM

Google News

ADDED : மார் 30, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான ஐ.சி.எல்., பின்கார்ப் நிறுவனம், விளம்பர துாதர்களாக நடிகர் மம்மூட்டி மற்றும் நடிகை சமந்தாவை நியமித்துள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைவர் அனில்குமார் கூறியதாவது:

வங்கி சாரா நிதி நிறுவனங்களில், இந்திய அளவில் முன்னிலையில் உள்ள ஐ.சி.எல்., பின்கார்ப் நிறுவனம், 32 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் பல கிளைகள் உள்ளன. இதுமட்டுமின்றி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளிலும் கிளைகள் உள்ளன.

தங்கத்தின் மீது கடன், வணிகக் கடன், வாகனக் கடன், சொத்துக் கடன், முதலீட்டு விருப்பங்கள், பணப் பரிமாற்றம், அன்னியச் செலாவணி மற்றும் வீட்டு காப்பீடு, சுகாதார காப்பீடு, வாகனக் காப்பீடு என, பல்வேறு நிதிசார் சேவைகளில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

தவிர, தமிழகத்தில் 92 ஆண்டுகளுக்கும் மேலாக நிதிசார் சேவையில் ஈடுபட்டு, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சேலம் ஈரோடு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தை, சமீபத்தில் ஐ.சி.எல்., பின்கார்ப் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.

அடுத்தகட்ட நகர்வாக, இந்நிறுவனம், நாடு முழுதும் பல கிளைகளை விரைவில் துவக்க உள்ளது. இதற்காக தங்கள் நிறுவனத்தின் விளம்பரதுாதர்களாக நடிகை சமந்தா மற்றும் நடிகர் மம்மூட்டி ஆகியோரை நியமித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us