/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் கம்பியை தாங்கும் மரக்கிளை கோட்டைக்காடில் விபத்து அபாயம்
/
மின் கம்பியை தாங்கும் மரக்கிளை கோட்டைக்காடில் விபத்து அபாயம்
மின் கம்பியை தாங்கும் மரக்கிளை கோட்டைக்காடில் விபத்து அபாயம்
மின் கம்பியை தாங்கும் மரக்கிளை கோட்டைக்காடில் விபத்து அபாயம்
ADDED : நவ 30, 2024 12:29 AM

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு, கடப்பாக்கம் துணை மின் நிலையம் வாயிலாக மின் வினியோகம் செய்யப்படுகிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கோட்டைக்காடு கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்கியபடி சென்றதால், சாலையில் செல்லும் வாகனத்தின் மீது, மின் கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் நிலை இருந்தது.
இதுகுறித்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் மரக்கிளையை கொண்டு, தாழ்வாகச் சென்ற மின் கம்பிகளை உயர்த்தி அமைத்தனர்.
இந்நிலையில், மரக்கிளை தேதமடைந்து, பலத்த காற்று வீசினால் சாலையில் சாய்ந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படுவதற்கு முன், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

