sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இடநெருக்கடியால் மாணவர்கள் அவதி; ஆக்கிரமிப்பு இடம் மீட்க கோரிக்கை

/

இடநெருக்கடியால் மாணவர்கள் அவதி; ஆக்கிரமிப்பு இடம் மீட்க கோரிக்கை

இடநெருக்கடியால் மாணவர்கள் அவதி; ஆக்கிரமிப்பு இடம் மீட்க கோரிக்கை

இடநெருக்கடியால் மாணவர்கள் அவதி; ஆக்கிரமிப்பு இடம் மீட்க கோரிக்கை


ADDED : ஜன 17, 2024 07:18 AM

Google News

ADDED : ஜன 17, 2024 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம் : செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட, 12வது வார்டு காந்திநகரில், 40 மாணவ - மாணவியருடன், அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

ஒரே கட்டடத்தில் இயங்குவதாலும், வகுப்பறை சிறிதாக இருப்பதாலும் மாணவ - மாணவியர் இடநெருக்கடியில் தவித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் இருந்த பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.

ஆனால், அந்த இடத்தில் புதிய கட்டடம் இதுவரை கட்டப்படாததால், பள்ளிக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், மாணவர்களுக்கு விளையாடுவதற்கு போதுமான இடவசதி இன்றி உள்ளனர். அதேபோல், பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை புதர்மண்டி இருப்பதால், மாணவ மாணவியர் அச்சம் அடைகின்றனர்.

மேலும், புதிய வகுப்பறை இல்லாததால், நெருக்கடியில் படித்து வருவதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு அருந்த போதிய இடவசதி இல்லாததால், வெளிப் பகுதியில் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய கட்டடம் இருந்த இடத்தில், கூடுதல் வகுப்பறைகள் கட்டி தரவும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டு, பள்ளி தேவைக்கு பயன்படுத்த, பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us