sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமல்லையில் முகாமிடும் இருளர்கள் அடிப்படை வசதிகளுக்கு வலியுறுத்தல்

/

மாமல்லையில் முகாமிடும் இருளர்கள் அடிப்படை வசதிகளுக்கு வலியுறுத்தல்

மாமல்லையில் முகாமிடும் இருளர்கள் அடிப்படை வசதிகளுக்கு வலியுறுத்தல்

மாமல்லையில் முகாமிடும் இருளர்கள் அடிப்படை வசதிகளுக்கு வலியுறுத்தல்


ADDED : பிப் 19, 2024 11:32 PM

Google News

ADDED : பிப் 19, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் முகாமிடும் இருளர்களுக்கு, குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தவும், கூடுதல் பேருந்துகள் இயக்கவும் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக வடமாவட்ட பகுதிகளில், இருளர்கள் அதிகம் வசிக்கின்றனர். வாழ்வாதாரத்திற்கு மரம் வெட்டுவது, அரிசி ஆலை, செங்கல் சூளை உள்ளிட்டவற்றில் கூலி வேலை செய்கின்றனர்.

அவர்களின் குலதெய்வம் கன்னியம்மன். வங்க கடலில் கன்னியம்மன் வீற்றுள்ளதாக கருதும் அவர்கள், ஆண்டுதோறும் மாசி மக உற்சவத்தின்போது, பல்லாயிரம் இருளர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என, மாமல்லபுரத்தில் கூடி, கடற்கரையில் சில நாட்கள் தங்குகின்றனர்.

மாசிமக நாளன்று காலை கடலில் நீராடி, கன்னியம்மனை வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

அவ்வாறு அவர்கள் முகாமிடும்போது, கடற்கரை மற்றும் பிற இடங்களில், தேவைக்கேற்ப போதிய அளவில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இன்றி பரிதவிக்கின்றனர்.

மேலும், அவரவர் ஊர் திரும்பத் தேவையான கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாமலும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, வரும் 24ம் தேதி மாசி மக உற்சவ நாள் என்பதால், சில நாட்களுக்கு முன்னதாகவே பல்லாயிரம் இருளர்கள் கூடுவர்.

அவர்களின் தேவைக்காக, பேரூராட்சி நிர்வாகம், குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தவும், கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us