sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையோரம் குப்பை குவிப்பு கடமலைப்புத்துாரில் சீர்கேடு

/

சாலையோரம் குப்பை குவிப்பு கடமலைப்புத்துாரில் சீர்கேடு

சாலையோரம் குப்பை குவிப்பு கடமலைப்புத்துாரில் சீர்கேடு

சாலையோரம் குப்பை குவிப்பு கடமலைப்புத்துாரில் சீர்கேடு


ADDED : டிச 21, 2024 12:56 AM

Google News

ADDED : டிச 21, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம், :அச்சிறுபாக்கம் அருகே திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், கடமலைப்புத்துார் ஊராட்சி அமைந்துள்ளது.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, புறவழிச்சாலையில் பிரிந்து ஒரத்தி வழியாக வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.

கடமலைப்புத்துார் புறவழிச்சாலை ஓரம் கோழி இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகள், ஹோட்டல் உணவுக் கழிவுகள் என, டன் கணக்கில் குப்பையை மர்ம நபர்கள் கொட்டி வருகின்றனர்.

இதை சிலர், தீயிட்டு எரித்து விடுகின்றனர்.

இதனால், அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது, குப்பை கொட்டப்பட்டுள்ள பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

எனவே, மீண்டும் குப்பை கொட்டாதவாறு, புறவழிச் சாலை ஓரம் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.

தற்போது உள்ள கழிவுகளை முறையாக அகற்ற, தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us