/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு 10 கணினி, 5 பிரின்டர் வழங்கிய நிறுவனம்
/
செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு 10 கணினி, 5 பிரின்டர் வழங்கிய நிறுவனம்
செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு 10 கணினி, 5 பிரின்டர் வழங்கிய நிறுவனம்
செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு 10 கணினி, 5 பிரின்டர் வழங்கிய நிறுவனம்
ADDED : ஆக 22, 2025 01:51 AM
தாம்பரம்:தாம்பரம் சானடோரியத்தில், சமீபத்தில் திறக்கப்பட்ட, செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு, தனியார் நிறுவனம் ஒன்று, 10 கணினி, 5 பிரின்டர்களை இலவசமாக வழங்கியது.
தாம்பரம் சானடோரியத்தில், 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனையை, கடந்த, 9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைதொடர்ந்து, அக்கட்டடத்தில், நோயாளிகளுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நோயாளிகளின் வசதிக்காக, 'ஜோகோ'என்ற தனியார் நிறுவனம், 10 கணினி, 5 பிரின்டர்களை, நேற்று, இலவசமாக வழங்கியது.
தேசிய நலவாழ்வு மையத்தின் இயக்குநர் அருண் தம்புராஜிடம், கணினி, பிரின்டர்களை, அந்நிறுவனத்தின் அதிகாரிகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.