/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமுதாய நலக்கூடம் அமைத்து தர பாபுராயன்பேட்டையில் கோரிக்கை
/
சமுதாய நலக்கூடம் அமைத்து தர பாபுராயன்பேட்டையில் கோரிக்கை
சமுதாய நலக்கூடம் அமைத்து தர பாபுராயன்பேட்டையில் கோரிக்கை
சமுதாய நலக்கூடம் அமைத்து தர பாபுராயன்பேட்டையில் கோரிக்கை
ADDED : ஏப் 29, 2024 04:27 AM
அச்சிறுபாக்கம் : பாபுராயன்பேட்டை ஊராட்சியில், சமுதாய நலக்கூடக் கட்டடம் அமைத்துத் தர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், பாபுராயன்பேட்டை ஊராட்சி பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் தங்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளை அச்சிறுபாக்கம், தொழுப்பேடு, மேல்மருவத்துார், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர். இதனால், பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, இப்பகுதியில் புதிதாக சமுதாய நலக்கூடக் கட்டடம் கட்டித்தர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

