/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்த உத்தரவு
/
செங்கை ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்த உத்தரவு
செங்கை ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்த உத்தரவு
செங்கை ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்த உத்தரவு
ADDED : ஏப் 10, 2024 11:12 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்துதர, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ், உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில், லோக்சபா தேர்தலையொட்டி, ஆறு சட்டசபை தொகுதிகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லுாரிகளில் ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களின் வசதிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில், ஓட்டுப்பதிவு மையங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு பாதை மற்றும் மின்விசிறி,பழுதடைந்த கதவுகள், ஜன்னல்கள் மாற்றம் செய்ய வேண்டும்.
குடிநீர் வசதி, கழிப்பறை துாய்மை, தரைதளம் சரி செய்தல்,ஓட்டுச்சாவடி மையங்களில் பந்தல், சுகாதார வசதிகள் செய்துதரவேண்டும்.
ஆதிதிராவிடர் பள்ளிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும் மையங்களில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
செங்கல்பட்டில் உள்ள சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில் 663, பல்லாவரம் சட்டசபை தொகுதி - 437, தாம்பரம் சட்டசபை தொகுதியில் 427, செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில் 443, திருப்போரூர் சட்டசபை தொகுதியில் 318, செய்யூர் -- தனி சட்டசபை தொகுதியில் 263, மதுராந்தகம் -- தனி சட்டசபை தொகுதியில் 274 என, மொத்தம் 2,825 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன.
இதில் மின் விசிறிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், உடனடியாக செய்து முடிக்க, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வரப்பெற்றுள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். தனியார் பள்ளி ஓட்டுச்சாவடி மையயங்களில், அடிப்படை வசதிகளை, நகராட்சி நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கலெக்டர் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

