/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
காலிறுதியில் ராமநாதன்: பெங்களூரு ஓபனில் முன்னேற்றம்
/
காலிறுதியில் ராமநாதன்: பெங்களூரு ஓபனில் முன்னேற்றம்
காலிறுதியில் ராமநாதன்: பெங்களூரு ஓபனில் முன்னேற்றம்
காலிறுதியில் ராமநாதன்: பெங்களூரு ஓபனில் முன்னேற்றம்
ADDED : பிப் 14, 2024 09:27 PM

பெங்களூரு: பெங்களூரு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் முன்னேறினார்.
பெங்களூருவில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், இத்தாலியின் லுாகா நார்டி மோதினர். முதல் செட்டை 1-6 என இழந்த ராமநாதன், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6-4 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய இவர் 6-4 என தன்வசப்படுத்தினார். முடிவில் ராமநாதன் 1-6, 6-4, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரஜ்வல் தேவ் 3-6, 0-6 என ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனிடம் தோல்வியடைந்தார்.
இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி 6-0, 7-6 என சகநாட்டை சேர்ந்த சித்தாந்த், பிரஜ்வால் தேவ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

