ADDED : ஏப் 19, 2024 09:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலாலம்பூர்: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றின் காலிறுதியில் இந்திய வீராங்கனை அகங்ஷா தோல்வியடைந்தார்.
எகிப்தில் வரும் மே 9--17ல் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய தகுதிச் சுற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கிறது. பெண்களுக்கான காலிறுதியில் உலகின் 'நம்பர்-71' இந்தியாவின் அகங்ஷா சாலுங்கே, 124வது இடத்தில் உள்ள மலேசியாவின் செவீத்ரா குமார் மோதினர்.
மொத்தம் 34 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய 'நடப்பு தேசிய சாம்பியன்' அகங்ஷா சாலுங்கே 0-3 (6-11, 5-11, 8-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

