/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
புரோ கபடி: டில்லி அணி கலக்கல்
/
புரோ கபடி: டில்லி அணி கலக்கல்
UPDATED : செப் 17, 2025 10:27 PM
ADDED : செப் 17, 2025 09:49 PM

ஜெய்ப்பூர்: புரோ கபடி லீக் போட்டியில் டில்லி அணி 33-29 என, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. இதில் தமிழ் தலைவாஸ், மும்பை உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்' என போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், டில்லி அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 14-9 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட டில்லி அணியினர், தெலுங்கு டைட்டன்ஸ் வீரர்களை 'ஆல்-அவுட்' செய்தனர். டில்லி அணிக்கு 24 புள்ளி கிடைத்தது. ஆட்டநேர முடிவில் டில்லி அணி 33-29 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. டில்லி அணிக்கு நீரஜ் நார்வல் (9 புள்ளி) கைகொடுத்தார். தெலுங்கு டைட்டன்ஸ் சார்பில் கேப்டன் விஜய் மாலிக் 5 புள்ளி பெற்றார்.
இதுவரை விளையாடிய 6 போட்டியிலும் வெற்றி பெற்ற டில்லி அணி, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஐந்தாவது தோல்வியை பெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் அணி, 6 புள்ளிகளுடன் (3 வெற்றி) 7வது இடத்தில் உள்ளது.
மற்றொரு லீக் போட்டியில் ஹரியானா, பாட்னா அணிகள் மோதின. இதில் ஹரியானா அணி 43-32 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.