ADDED : மார் 17, 2026 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது வழுதாவூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 37; மது போதையில் காட்டேரிக்கப்பம் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் அவர் தொடர்ந்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்ததால், அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

