ADDED : ஏப் 27, 2026 05:39 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரிக்கலாம்பாக்கம் காந்தி நகரில், வாலிபர் மது போதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக மங்கலம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து போலீசார் அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், விழுப்புரத்தை சேர்ந்த ஆதித்தன், 24; என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
