ADDED : மார் 21, 2026 10:01 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: உலக சிட்டுகுருவி தினத்தையொட்டி பொதுமக்களுக்கு இலவச குருவி கூண்டுகளை வழங்கப்பட்டது.
புதுச்சேரி கொசக்கடை தெருவில் உள்ள நாட்டு மருந்து கடையில் உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அருண் பசுமை இயக்கம் சார்பில், நுாற்றுக்கும் மேற்பட்ட சிட்டுக்குருவி கூண்டுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. சிட்டுக்குருவிகள் மீண்டும் நம் வாசல் தேடி வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அருண் பசுமை இயக்கம் நிறுவனர் அருண் செய்திருந்தார். குருவிகளுக்காக எடுக்கப்பட்ட இந்தச் சிறிய முயற்சி, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
