ADDED : டிச 25, 2024 07:15 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : பைக் இல்லாத விரக்தியில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கரிக்கலாம்பாக்கம், பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி, 47; கூலித்தொழிலாளி. இவரது பைக்கை அவரது நண்பர் வாங்கி சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக பைக்கை போலீசார் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பைக் இல்லாத விரக்தியில் வெங்கடாஜலபதி நேற்று முன்தினம் இரவு அவரது அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
