கரையாம்புத்துார் அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
கரையாம்புத்துார் அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
ADDED : ஏப் 12, 2026 10:10 PM

நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், நெட்டப்பாக்கம் பகுதிகளில் ஊரக வேளாண் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரையாம்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கினர்.
தொடர்ந்து மாணவர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து, மரங்கள் நடும் நிகழ்ச்சியை மேற்கொண்டனர். அரசு பள்ளி மாணவர்களிடம் சுத்தத்தின் முக்கியத்துவம், சுத்தமான சூழலை பேணுதல் மற்றும் மரங்கள் சூழலுக்கு அளிக்கும் பயன்கள் குறித்தும், மரங்கள் காற்று துாய்மையை உயர்த்துவதும், பயோடைவர் சிட்டிக்கு உதவுவதும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
