ADDED : டிச 13, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: சென்னை மத்திய மீன்வள கடல் சார் மற்றும் பொறியியல் நிலையம் சார்பில் நடத்தப்பட்ட பயிற்சி பட்டறையை கலெக்டர் மணிகண்டன் துவக்கி வைத்தார். துணை இயக்குநர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார்.
மத்திய பயிற்சி நிலைய முதன்மை பயிற்சி அதிகாரி மணிமாறன், படகுகள் பழுது நீக்கல் மற்றும் பராமரிப்பு குறித்து மீனவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
பயிற்சி பெற்ற மீனவர்களுக்கு, துணை கலெக்டர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்.

